திருநெல்வேலி: தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தவறு இல்லை என்று பாமகதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி, ஏற்கனவே நான் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறேன். பிரிப்பது தவறு இல்லை. அப்படி பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 32 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். அதற்கு பிறகு தற்போது சிலர் அதை முன்னெடுத்துச் செல்கின்றனர். இரண்டாகப் பிரித்தால் நல்லது.
சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வகிப்பது எளிது, நல்ல வளர்ச்சியும் இருக்கும். சென்னையைப்போல மதுரையிலும் ஒரு தலைமை செயலகம் இருப்பது தவறு இல்லையே. அப்படி இருந்தால் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அந்த மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல, எதிர்காலத்தில் தமிழக மக்கள் விரும்பினால் இரண்டாகப் பிரிக்கலாம்.
ஆனால் அதைவிட இப்போது நாங்கள் முக்கியமான பிரச்சனையாகக் கருதுவது மீனவர் வாழ்வுரிமை, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதி நீர் உரிமைப் பிரச்சனைகள், சமச்சீர் கல்வி, பூரண மதுவிலக்கு ஆகியவற்றைதான்.
தமிழகத்தைல் காமராஜர் ஆட்சிக் காலம்தான் பொற்கால ஆட்சி என்பார்கள். மக்கள் எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கொடுத்தால் அதைவிட சிறந்த ஒரு ஆட்சியை கொடுக்க முடியும்.
இதுவரை தொழில்துறை, விவசாயம், கல்வி என ஒவ்வொன்றுக்கும் ஒரு கொள்கை வெளியீட்டுடன் விரிவான நிழல் பட்ஜெட்டையும் நாங்கள் ஆண்டுதோறும் தயாரித்து, சமர்பித்து வருகிறோம். அதைப் பார்ப்பவர்கள் தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என கூறுகின்றனர்.
நான் சொன்ன பிறகுதான் தற்போது உயர் கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் தனித் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போதாது. மழலையர் கல்வி, ஆரம்பக் கல்விக்கு என தனியாக ஓர் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
கூட்டணி குறித்து கேட்டதற்கு, அது சட்டப் பேரவைத் தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். இடைத் தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் '49 ஓ' படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம்.
வந்தவாசி இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பாமக செயல்படவில்லை. பாமகவை பொறுத்தவரையில் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் கூட்டணி அமைப்பது இல்லை. தொகுதி உடன்பாடுதான் வைத்திருந்தோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வருகிற 2011ம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் என்றார்.
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
No comments:
Post a Comment