Tuesday, May 26, 2009

தமிழக தலைமைகளின் போக்கு

தமிழக தலைமைகளின் போக்கு


கொடூரப் போரின் உச்ச வேதனைகளால் வெந்து துடித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்கு அய லில் "தொப்புள் கொடி" உறவுகளின் அரசியல் போக்குக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்ற இரண்டுங்கெட்டான் நிலை.

யுத்தத்தில் சீரழிந்த ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்து விடாமல்"காட்டிக் கொடுத்த" தமிழகத் தலை வர்கள், இன்று சொற்பகாலத்திற்குள்ளேயேதங்க ளுக்குக் கூடத் தாங்களே எதுவும் செய்ய இயலாதவர் களாக புதுடில்லியிடம் கைகட்டி நிற்கும் பரிதாபம் கண்டு பச்சாதாபப்படுவதைத் தவிர எமக்கு வேறு மார்க் கமில்லை.

நேற்று முன்தினம் வரையான ஐந்து ஆண்டு கால இந்திய மத்திய அரசின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில்தான் ஈழத் தமிழர்கள் மிகமோசமாக அடக்கி, ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுவதற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமா கப் பெருமளவில் துணைபோனது என்பது உலகறிந்த இரகசியம். அதைத் தடுக்கத் தவறி தடுக்க இயலா மல் அப்பெருங்குற்றத்தில் பங்காளியானது தி.மு. கவும் அதன் தலைமையும் என்பது ஈழத்தமிழரின் மனத் தாங்கல்.

அப்படித் துணை போயும் கூட தி.மு.க. தனக்குத் தன்னும் பயன்தரக் கூடிய உருப்படியான விடயங் கள் எதையாவது சாதித்ததா என்று பார்த்தால் தமிழகத் தில் தனது ஆட்சியைத் தக்க வைத்ததைத் தவிர அது வேறு எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

யுத்தத்தில் சிக்குண்டு அவலப்பட்ட ஈழத்தமிழர் களைப் பாதுகாக்க மறுத்து, அவர்களுக்கு எதிராக சதி முயற்சியோடு செயற்பட்ட புதுடில்லி அரசுத் தலை மைக்குக் கண்ணை மூடிக் கொண்டு முண்டு கொடுத்த பெருந்தவறின் பெறுபேற்றை அனுபவிக்கும் வாய்ப்பு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது தி.மு.கவுக்கும் விரைவிலேயேகிட்டியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் பேரிழப்புக்களை முன்னிறுத்தி, இந்திய மத்திய அரசை அவ்விடயத்தில் ஒழுங்காகச் செயற்பட வைக்கத் தவறிய தி.மு.க. தலைமை, அவ் விடயத்தைப் புறந்தள்ளி விட்டு, தனது அரசியல் ஆதா யத்துக்காக, இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தட்டிக் கேட்க வேண்டிய விடயத்தில் அப்படிக் கேட்கத் தவ றிய தி.மு.கவை, இப்போது தனது தேர்தல் வெற்றி உறு தியானதும் தூக்கி மூலையில் கடாசி விட்டது காங்கி ரஸ் கட்சி.


இந்திய மத்திய அரசின் அமைச்சுகள் ஒதுக்கீட்டில் தான் போடும் பிச்சையைப் பவ்வியமாகப் பெற்றுக் கொண்டு அடங்கிப் போகுமாறு கலைஞருக்கு புது டில்லியில் நல்ல சூடு கொடுத்து அனுப்பியிருக்கின்றார் சோனியா காந்தி.

இந்தக் கசப்பு மருந்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார் கலைஞர். வால் பிடிக்கும் உதிரிக் கட்சிகளின் உதவியுடன் தனது மத் திய அரசு உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தலைவி எண்ணுவதால் தி.மு.கவை உதாசீனப்படுத்தி உதைத் துத்தள்ளி விட்டார் அவர்.

ஆனால் கலைஞராலோ எது வும் செய்ய முடியாத நிலை. சீறிக் கொண்டு காங்கி ரஸ் உறவைத் துண்டித்து விட்டால் தமிழகத்தில் காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 35 பேரின் தயவில் ஆளும் தமது சிறுபான்மை ("மைனாரிட்டி") அரசு கவிழ்ந்து விடும் ஆபத்து. அதனால் இந்திய மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற"விழுந் தும் மீசையில் மண்படவில்லையே!" என்பது போன்ற நிலைமையை அனுசரிக்க வேண்டிய விரக்தி நிலை கலைஞர் தரப்புக்கு.

ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, காங்கிரசுக்கு முண்டு கொடுத்த பாவத்திற்கு நல்ல படிப்பினைகள் இன்னும் பல அவருக்குக் காத்திருக்கின்றன.

தமிழக இந்திய அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டிய நிலைப்பாட்டிலும் கூடத் தாங்கள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை தமிழகத்தின் பிரபல அரசியல் தலை வர்கள் பலரும் நிரூபித்து நிற்கிறார்கள் என்பதே யதார்த் தமாகும்
-நன்றி-
http://www.pathivu.com/news/1957/54//d,view.aspx

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: