Saturday, November 22, 2014

அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்

சென்னை: 1996-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாமக தலைமைச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு மணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜெ.குரு, கணேஷ் குமார், வழக்கறிஞர் பாலு உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:தமிழகத்தில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இப்போதும் அதே நிலைதான்.எனவே அன்றைக்குத் தந்தது போலவே இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும்.பாமக கூட்டணியில் மதிமுக, காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைய வேண்டும்.ஜெயலலிதாவின் நிலைமை யைப் பார்த்து அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது. 2016 தேர்தல் ஒரு குருஷேத்திரம். இதில் புதிய கீதோபதேசம் எழுத ஊடகங்கள் துணை நிற்கவேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: