Thursday, November 20, 2014

அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது!- டாக்டர் ராமதாஸ்

கோவை: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பூரண மதுவிலக்கு, நீராதார திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு ரலாம். அரசியலுக்கு வர ரஜினிக்கு முழு உரிமை உள்ளது.. அவர் வருவதற்கு முன்பே விமர்சனங்கள் தேவையற்றது," என்றார்.மேலும் அவர் கூறுகையில், "2016 ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். அப்போது ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலை வரும்," என்றார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: