Tuesday, August 19, 2014

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா: ராமதாஸ் கண்டனம்



சென்னை தேனாம்பேட்டையில் பாமகவின் தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 19.08.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

இந்த ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தைப் போல அரசே தண்ணீரை விற்கும் அவலம் வேறு எங்கும் இல்லை. 2023ல் ஒளிமயமான எதிர்காலம் என தமிழக மக்களை அதிமுக ஏமாற்றி வருகிறது.

அரசின் விளம்பரத்தை கருவியாக பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அதிமுக அரசு பறித்து வருகிறது. பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது. தொலைக்காட்சி சுதந்திரம் கிடையாது. விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவா பத்திரிக்கை சுதந்திரம். இங்கு நடப்பது ஹிட்லர் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா. இவ்வாறு பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: