Sunday, August 24, 2014

திருப்போரூர்: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக- அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழகத்தில் ஆளும் கட்சிகளை எதிர்த்து துணிவோடு கேள்வி கேட்கும் ஒரே நபரும் நான் தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கலந்து கொண்டார்.
திமுக - அதிமுக ஆட்சி... மதுவை ஒழிக்க எந்த மகன் வரப்போகிறான் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க- அ.தி.மு.க. மாறி மாறி மதுக்கடைகளை அதிகம் திறந்து வருமானத்தை பெருக்கியுள்ளது.
முதல் கையெழுத்து... நான் முதலமைச்சராக வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதுதான். தேர்தல் நேரத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சாராயத்தை ஒழிப்போம்... நமது கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று சாராயத்தை பா.ம.க. தான் ஒழிக்கும் என பெண்களிடம் சத்தியம் செய்யுங்கள். குடிகாரன் கூட மதுவை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறான். மதுக்கடைகள் இருப்பதால் தான் குடிப்பதாக தெரிவிக்கிறான்
தமிழகத்தில் லஞ்சம் பெருகிவிட்டது. காற்றாலையை நம்பிதான் இந்த அரசாங்கம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் புதியதாக ஒரு யூனிட் கூட மின்உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழகத்தில் துணிவோடு கேள்விகேட்கக்கூடிய ஆள் நான் மட்டுமே. மற்றவர்கள் பயப்படுகிறார்கள். எத்தனை அவதூறு வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பேன்.
இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. இருகட்சிகளையும் ஒழிக்க காங்., பாஜக, கம்யூ. உள்ளிட்ட எந்த கட்சியாலும் முடியாது. இரு கட்சிகளையும் ஒழிக்கின்ற அவதாரத்தை பா.ம.க. எடுத்துள்ளது' 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: