Wednesday, June 19, 2013

மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்



தருமபுரியை அடுத்துள்ள சோம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடகக் காதல் திருமணம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து எந்தக் கட்சியும் குரல் கொடுக்காத நிலையில், பாமக மட்டும் அதற்காக குரல் கொடுத்தது. மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து சமுதாயத் தலைவர்களையும் அணி திரட்டியது.
இதன் காரணமாகவும், தமிழகத்தின் அடுத்த ஆட்சி வன்னியர் ஆட்சி எனக் கூறியதாலும் பாமகவை முடக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தருமபுரி, மரக்காணம் வன்முறைச் சம்பவங்களைக் காரணமாகக் கூறி, 120  பேர் தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில்கூட 2 மாதங்களில் இத்தனை பேர் மீது இத்தகையச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்புக்கு மட்டுமே பாமக அடி பணியும். அராஜகத்துக்கும், அதிகாரத்துக்கும் அடி பணியாது. அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் பாமக-வுக்கு வேண்டாம். வரும் மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். மாநிலங்களவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: