Wednesday, June 19, 2013

பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க, வினர் மீது பொய் வழக்குப் போடுவதாகக் கூறி, காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேர் மீது அந்தக் கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாமக மாநில இளைஞரணி துணைத் தலைவர் சுப.குமார், கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-இல் தொடர்ந்த வழக்கு விவரம்:
பாமக நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸார் தொடர்ந்து பாமகவினரை மிரட்டி வருகின்றனர். பொய்யாக வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். உறவினர் வீட்டுக்குச் சென்று வரும் போது, பர்கூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் மகாராஜகடை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் என்னை வழிமறித்து, தகாத வார்த்தையால் திட்டி, கடுமையாகத் தாக்கினர்.
எனவே, எண்ணை தொந்தரவு செய்த போலீஸார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: