Wednesday, June 19, 2013

2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்



தருமபுரியை அடுத்துள்ள சோம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி
இல்லத் திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தது போதும். மாற்றம் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றமாக பாமகவை மக்கள் தேர்வு செய்வர்.
2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். பாமக தலைமையில் ஆட்சி அமைந்தால் முதலில் இடப்படும் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமலுக்காக இருக்கும். கல்வி, மருத்துவம் மட்டும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கான அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். வேறு இலவசங்களே கிடையாது என அறிவிக்கப்படும்.
தருமபுரி, மரக்காணம் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பாமகவிடம் ரூ.50 கோடி வசூலிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்படுகிறது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: