
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தது போதும். மாற்றம் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றமாக பாமகவை மக்கள் தேர்வு செய்வர்.
2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். பாமக தலைமையில் ஆட்சி அமைந்தால் முதலில் இடப்படும் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமலுக்காக இருக்கும். கல்வி, மருத்துவம் மட்டும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கான அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். வேறு இலவசங்களே கிடையாது என அறிவிக்கப்படும்.
தருமபுரி, மரக்காணம் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பாமகவிடம் ரூ.50 கோடி வசூலிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்படுகிறது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment