Monday, March 4, 2013

இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம் டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கை பிரச்சினைக்காக இனி ஒருபோதும் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூரை அடுத்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தமிழ் உணர்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர் தீக்குளித்திருக்கிறார்.

தமிழ் உணர்வாளர் மணி தீக்குளித்த செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்களப்படையினருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: