Sunday, March 3, 2013

''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம்''



சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல்வர் பதவிக்கு அனுப்பிட வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா- மாநாடு‘ நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, வீரபாண்டி தொகுதிகளில் இருந்து வன்னியர் இளைஞர்கள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் சிவதாபுரம் மாணிக்ககவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஐயா அறிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதால் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பயணம் தொடரப்பட்டுள்ளது.
அன்புமணியை முதல்வராக்க வேண்டும்:
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அனுப்பிட வேண்டும்.
வன்னியர் ஒருவர் முதல்வர் ஆனால்தான் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே, யாரையும், எந்த சமுதாயத்தையும் நம்பாமல் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி மற்றும் என்னை போன்றவர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த வேளையில்தான் தர்மபுரி கலவர சம்பவம் நடந்து விட்டது. பாமக, விடுதலை சிறுத்தையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் வேளையில், தர்மபுரி சென்று வந்த திருமாவளவன் அங்கு நடந்த கலவர சம்பவத்திற்கு வன்னியர்களும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சொல்லிவிட்டார்.
அவரும் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தர்மபுரி கலவரத்திற்கு பாமகவும் டாக்டர் ராமதாசும் பொறுப்பாக முடியாது. போலீசார் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றார் குரு.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: