Friday, November 30, 2012

பொங்கலூர் மணிகண்டன் - ராமதாஸ் சந்திப்பு

தருமபுரி கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தருமபுரியில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இன்று(30.11.2012) மாலை 3.30 மணியளவில் கொங்கு வேளாள கவுண்டர்களுக்காக அமைப்பு வைத்து நடத்தும் பொங்கலூர் மணிகண்டன் கலவரம் நடந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு வரும்வழியில் பொங்கலூர் மணிகண்டன், அதியமான் பேலஸ்சில் தங்கியிருந்த மருத்துவர் ராமதாஸ்சை சந்தித்து பேசியுள்ளார்.

இரண்டு தரப்பும் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை வெளியிடவில்லை.

பெங்கலூர் மணிகண்டன், மாற்று சாதியினர் கொங்கு கவுண்டர் இன பெண்களை திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். அதோட தலித் அல்லாதோர் அமைப்பை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் வன்னியர் இன பெண்களை மாற்று சாதியினர் திருமணம் செய்வதை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இருவரும் சந்திப்பு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: