Monday, November 5, 2012

நான் தயார்: அவர்கள் தயாரா?

சென்னையில் 05.11.2012 செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்தால், மூன்று மாதத்தில் மின்வெட்டே இல்லாமல் செய்துவிடுவோம் என்று உறுதி அளித்தார் ஜெயல-தா. ஆனால் இதுவரை மின்உற்பத்திக்கான செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. எண்ணூர் அனல் மின் நிலையம், தஞ்சாவூர் குத்தாலம் எரிவாயு நிலையம் போன்றவைகளை மூடியதும். நிர்வாகம் செய-ன்மையுமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம். இருக்கின்ற மின் நிலையங்களை சரியாக பராமரித்தாலே போதும். சுப்ரீம் கோர்ட்டில் மின்சாரம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பது தேவையற்றது.
மூன்று மாதத்தில் சொன்னபடி மின்உற்பத்திக்கு தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டுவிட்டது என்று அதிமுக அரசு சொல்கிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ்,
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நான் நிரூபிக்க தயார். அவர்கள் தயாரா? என்றார்.
மேலும் பேசிய ராமதாஸ், ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான தேர்ச்சிக்கு காரணம், தரம் இல்லாத கல்வியே. அதை சரியான முறையில் ஒழுங்குப்படுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் பசுமை தாயகம் பொறுப்பாளர்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் ஐ.நா. மன்ற உறுப்பினர்களிடம் தங்கள் கோரிக்கைகளையும், வாதங்களையும் எடுத்து வைத்துள்ளனர். ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பாக்கிறோம். இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. குட்கா, பான்பராக் போன்ற போதைப்பொருட்களை 14 மாநிலங்களில் தடை செய்துள்ளனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: