Wednesday, November 9, 2011

மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்: ஜெயலலிதா போக்கு மாறவேவில்லை- பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: 12,000 மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தன்மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது தெரிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்களை திடீர் என்று பணி நீக்கம் செய்தது கண்டனத்திற்குரியது. கடந்த 2003ம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 2 லட்சம் அரசு ஊழியர்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரே இரவில் பணிநீக்கம் செய்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

தற்போது அவர் திடீர் என்று மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் போக்கு மாறவேயில்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு 12,000 மக்கள் நலப் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: