Thursday, October 13, 2011

பாமக வித்தியாசமான கட்சி: ராமதாஸ் பேச்சு

சேத்தியாத்தோப்பில் நேற்று இரவு பாமக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர், ‘’பாமக ஒரு வித்தியாசமான கட்சி என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாமக உள்ளது.

அதனால் தான் படித்தவர்கள், பெண்கள், விவசாயிகள் ஆதரவு பெருகி வருகிறது. விவசாய வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சி பாமக. தமிழ்நாட்டை பாதுகாக்க பாமகவால் மட்டுமே முடியும் என படித்தவர்கள் கூறுகிறார்கள்.

பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை திராவிட கட்சிகள் குழிதோண்டி புதைத்து விட்டன.

சாராயத்தை கொடுத்து மக்களை சீரழித்து விட்டார்கள். இப்போது ஓட்டுக்கும் சாராயம் கொடுக்கிறார்கள். 2016ல் பாமக ஆட்சி அமைக்கும். அப்போது சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். பாமக போராடும் கட்சி. உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும். அனைவரும் பாமகவை ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: