Tuesday, November 15, 2011

கல்பாக்கம் அணுஉலையை மூடவேண்டும்: ராமதாஸ்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூடவேண்டும் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் பா.ம.க., சார்பில் மருத்துவக்குழு ஒன்று செல்லவுள்ளதாகவும், அக்குழு அணுகதிர் வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கும் வகையில், அணுஉலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும், உலகின் மிகப்பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணுஉலையை வரும் 2020ம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: