Monday, September 14, 2009

கவனிக்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லாதீர்கள்..-ராமதாஸ்

சென்னை: இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற உத்தரவைமத்திய அரசுவாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உள்ள மரபுரிமையின்படி அங்கே செல்லும்போது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புவேண்டும் என்று வலியுறுத்தி 3 வார காலமாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் பகுதிமீனவர்கள் மாநில அரசு அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டமீனவர்கள்காயம் அடைந்துள்ளனர்; அவர்களது 3 விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.மத்திய அரசு்- மாநில அரசும் தலையிட்டு தங்களது உயிருக்கும், உடமைக்கும்பாதுகாப்புஅளிப்பதற்கானநடவடிக்கைை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது முதல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறியநடவடிக்கைளால் நூற்றுக்கணக்கில் நமதுமீனவர்கள்உயிரிழந்திருக்கிறார்கள்.

இத்தகைய தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசு க்கு மாநில அரசு கடிதம் எழுதுவதும், `கவனிக்கிறோம் -நடவடிக்கைஎடுக்கிறோம்' என்று மத்திய அரசு பதில் கடிதம் எழுதுவதும் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இனி, கடிதம் எழுதுவது மட்டுமே போதாது. கச்சத்தீவு கடல் பகுதியில் நமது மீனவர்களுக்கு பரம்பரையாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும். இதற்கு 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்திருக்கும் தடை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.

1967ம் ஆண்டில் பதவிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்காக ``கோரிக்கை நாள்'' கடைப்பிடிக்க ஆணையிட்டவர் அண்ணா. அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த சமயத்தில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை தேடித்தரும்நடவடிக்கைளை மேற்கொண்டு இந்திய அரசிடம் அதற்கான உத்தரவாதத்தை பெற்று அண்ணாவின் நினைவிற்கு காணிக்கையாக்க வேண்டும்.

நமது மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது, கச்சத்தீவு தொடர்ந்து இலங்கை வசம் இருந்தால், அதன்மூலம் நமது எதிரி நாடுகளிடம் இருந்து நமது பாதுகாப்பிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட உள்ள அச்சுறுத்தலையும், ஆபத்தையும் உரிய முறையில் எடுத்துக்கூறி கச்சத்தீவு ஒப்பந்தத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வாதாட வேண்டும்.

அதற்கு முதல்படியாக 1976ம் ஆண்டில் இந்திய அரசு பிறப்பித்த தடை ஆணையை விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை களை மாநில அரசும், முதல்வரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: