Friday, August 7, 2009

18ம் தேதி பெரிய 'தமாஷ்' நடக்க போகுது-ராமதாஸ்

தர்மபுரி: 18ம் தேதி நடக்கப் போகும் இடைத் தேர்தல் மிகப் பெரிய தமாஷ் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

தர்மபுரியில் ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் நடைமுறை என்பது அண்மை காலமாக கேலிக்கூத்தாகிவிட்டது. இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை கைப்பற்றி வாக்குகளை பெறுகிறார்கள்.

தேர்தல் கமிஷன் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளது. வருகிற இடைத் தேர்தல்கள் கேலி கூத்து வருகிற 18-ந் தேதி ஒரு தமாஷ் நடக்கப்போகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட் டங்களில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிகமாக உள்ளது. இதனால் பாதுகாப்பான குடிநீர் வழங்க கோரி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தி உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2008-ல் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தமிழக முதல்வர் கலைஞர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் ஏப்ரல் 5-ந் தேதி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளிவர வில்லை. இந்த நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

உச்சநீதிமன்றம் சென்றால் 50 ஆண்டு காலம் ஆனாலும் கூட முடிவுக்கு வராது.

காவிரி நதிநீர் பங்கீடு திட்டம் 1974-ல் புதுப்பித்து இருக்க வேண்டும். அப்போது இருந்த தி.மு.க. அரசு அதை புதுப்பிக்கவில்லை. இதற்கிடையில் கர்நாடக அரசு பல அணைகளை கட்டி விட்டது. அதற்கு அவர்கள் திட்டமில்லா செலவுகளுக்கான நிதியில் இருந்து அணைகளை கட்டி முடித்துள்ளனர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 1998-லேயே மத்தியஅரசு தடை இல்லா சான்று வழங்கி உள்ளது. அதே சமயம் பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் மேகதாது குடிநீர் திட்டத்திற்கும் தடை இல்லா சான்று வழங்கியது. ஆனால் கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர் திட்டத்தை வேகமாக நிறை வேற்றிவிட்டது.

நாம் 11 ஆண்டுகள் ஆகியும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறை வேற்றவில்லை. கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் மாற்றத்திற்கு காரணம் இந்த திட்டம் தாமதம் ஆகவேண்டும் என்பதே ஆகும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: