Wednesday, June 10, 2009

ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் கருணாநிதியுமே காரணம் ‐ ராமதாஸ்

சேலத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய ராமதாஸ், இலங்கையில் கடைசி சில நாட்கள் நடந்த போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட இந்திய அரசும் கருணாநிதியுமே காரணம்.


பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது உலகமே அதற்காக வருந்தியது, கண்டித்தது ஆனால் இந்தியா மௌனமாக இருந்ததோடு பல் வேறு இராணுவ உதவிகளையும் செய்தது. ஆனால் கருணாநிதி இதைத் தட்டிக்கேட்கவில்லை. மாறாக நாடகம் மேல் நாடகமாக நடத்தி தமிழர்கள் காதில் பூ சுற்றிக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறினார். ஆனால் கிருஷ்ணாவை இலங்கை அரசு கடுமையாக கண்டித்தது. அது குறித்தும் இந்தியா வாய்திறக்க மறுக்கிறது. இனி மேலும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது.

போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழகம் கொந்தளித்த போது கருணாநிதி ஈழ மக்கள் தொடர்பாக மத்திய அரசிடம் என்ன பேசினார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: