Saturday, April 6, 2013

நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும்




சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு எங்கும் திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 06.04.2013 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. பாமக முன்னணி நிர்வாகிகள் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியினர், பெண்கள் மற்றும் மதுவுக்கு எதிரானவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: