Monday, January 7, 2013

பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள 1.84 குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து 1967ல் ஆட்சியைப்பிடித்த திராவிடக் கட்சிகள், ஒருபுறம் மக்களை முன்னேற்றுவதாகக் கூறிக்கொண்டு, இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழித்து வருகின்றன.

கடந்த ஆண்டு வெளியிட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 அறிக்கையில் தமிழகத்தில் தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை ரூ.22 லட்சமாகவும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்த முதலமைச்சர்,

அடுத்த ஆண்டிலேயே வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது அவமான கரமானதாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் ரூ.300 கோடியை பயன்படுத்தி சமச்சீர் கல்வித் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தலாம்’’ என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: