Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி 20ம் தேதி பாமக முழக்கப் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வருகிற 20ம் தேதி பாமக சார்பில் தமிழகம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்போது, அதை மற்ற வகுப்புகளுக்கும் நீடிப்பதற்கு தடை எதுவும் இருக்க முடியாது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போதைய கல்வியாண்டில் வேறு பாடத்திட்டத்தில் படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும்.

எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் மூலமாக இக்கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை நினைவரங்கம் அருகே எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: