Thursday, October 21, 2010

பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு! - ராமதாஸ்

சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், என பாமக நிறுவனர் டாக்டரக் ராமதால் கூறினார்.

மதுராந்தகம் தொகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டம் பா.ம.க. சார்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இந்தியாவில் பணக்காரர்களில் முதலிடம் அம்பானி. 234 தொகுதிகளிலும் அவர் கை காட்டும் ஆள் ஜொயிக்க முடியும். அம்பானி சொல்லும் நபர் முதல்வர் ஆக முடியும்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான். தமிழகத்தில் மதுவை ஒழிப்பதுதான் அனைத்து சீரழிவுக்கும் வைக்கப்படும் முற்றுப்புள்ளி.

சமச்சீர் கல்வி கட்டணம் ஒரே கல்வி அனை வருக்கும்சம கல்வி. ஆகவே இளைஞர்கள், இளம் பெண்கள் பா.ம.க.வில் சேர்ந்தால் பா.ம.க. கட்சி நிச்சயம் வெற்றி பெறும்..." என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: