Tuesday, October 26, 2010

யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம்-டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம்: நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். அதில் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

திண்டிவனம் அருகே உள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் பாமக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்

தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.

கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: