Tuesday, April 13, 2010

மேலவை கலைப்பும் நடிகையும்-பாமக

சென்னை: தமிழகத்தில் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். அதுவும் மேலவை கலைப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது என்று பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி கூறினார்.

மீண்டும் மேலவையை அமைப்பது தொடர்பாக நேற்று தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தின் முழு விவரம்:
ஜி.கே.மணி (பாமக): அதிமுக ஆட்சிக் காலத்தில் மேலவையைக் கலைப்பதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, கனத்த இதயத்தோடு நாவலர் நெடுஞ்செழியன் முன்மொழிந்ததாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். மேலும் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். மேலவையில் கலைஞர் இருக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் அது கலைக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆக, இவையெல்லாம் மேலவையைக் கலைப்பதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

மேலவையை மீண்டும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாமக முழுமனதோடு வரவேற்கிறது.

செங்கோட்டையன் (அதிமுக): மேலவை கலைக்கப்படுவதற்கு நடிகை காரணம் என்று ஜி.கே.மணி பேசினார். நெடுஞ்செழியன் மனபாரத்தோடு இருந்தார் என்றும் அவர் கூறினார். கற்பனை கதையாக அவர் இப்படி கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜி.கே.மணி: பத்திரிக்கை மூலமாகவும், நாவலருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும் கிடைத்த தகவலைக் கூறினேன். இன்னும் பல தகவல்கள் உள்ளன. அவை கலைக்கப்பட்ட போது மேலவையில் வீற்றிருந்த ம.பொ.சி. கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து சபை நீடிக்கும்படி கேட்டார்.

(இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிடவே பதிலுக்கு பாமகவினரும் பதில் தந்தனர். இதனால் இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் வாக்குவாதத்தில் இறங்கினர். சபாநாயகர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்)

ஜி.கே.மணி: சட்டசபையில் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில்தான் பேச முடிகிறது. மேலவையில் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பேச முடியும்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: