Wednesday, November 25, 2009

இடைத்தேர்தல்: பா.ம.க. போட்டியில்லை

சென்னை, நவ. 25: திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம்.

நீதிமன்ற தீர்ப்புகளால் நடைபெறும் இடைத்தேர்தல்களைத் தவிர, பிற காரணங்களால் நடைபெறும் இடைத்தேர்தல்களில், அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதை எங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தேர்தல் நடைமுறைகளில் இதற்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். இதற்கு எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: