சேலம்: சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்த முதல்வர் கருணாநிதியை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சமச்சீர் கல்வி வர வேண்டும் என பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இப்போது தமிழக அரசு 1-ம்வகுப்பு, 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே வகையான, தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
பொது பாடத் திட்டம், பொது பாட நூல்கள் மட்டும் போதாது. சமமான, தரமான கல்வியை செயல்படுத்த பள்ளிக்கூட வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களது திறமை, பாடநூல்கள் தேர்வு முறை, பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வி நிர்வாகம் ஆகிய அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.
பெருமபாலான பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இருப்பது இல்லை. ஆய்வங்களில் கருவிகள் இல்லை. வசதிப்படைத்தவர்களின் குழந்தைகள் கற்கும் பிரிகேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிப்பை அரசே கிராமப்புற குழந்தைகளுக்கும் கொண்டு வந்து தரமான கல்வியை தரவேண்டும் என்றார்.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து மற்ற கட்சியினருடன் முதல்வர் கருணாநிதி கருத்து கேட்க உள்ளதாக கூறுகிறார்களே. அப்படி நடந்தால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு,
கல்வித்துறை நிபுணர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் கலைஞர் கலந்து பேசி அதை உள்வாங்கி யோசனைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சமச்சீர் கல்வி பணக்காரர்கள்-ஏழைகளுக்கு இடையிலான பாகுபாட்டை குறைத்துவிடும்.
கல்வி கொள்ளைக்கு வழி வகுக்காது. ஆலோசனை கூட்டம் கூட்டி எனக்கும் அழைப்பு அனுப்பினால் முதல்வரை சந்தித்து பேசி எனது கருத்தை கூறுவேன். சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்ததற்காக நிச்சயம் முதல்வரை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிலளித்தார் ராமதாஸ் .
Saturday, September 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
No comments:
Post a Comment