Thursday, March 3, 2016

ராமதாஸ் எழுதிய 6 நூல்கள் வெளியீட்டு விழா



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள் ‘என் கடன் பணி செய்வதே’ தலைப்பில் 5 தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

1. சமூக நீதியும் தமிழும் என் உயிர் மூச்சு, 2. மக்களைக் காக்க மது விலக்கு, 3. ஒரே தீர்வு தமிழீழம், 4. நதிநீர் பிரச்சினைக்கு நான் விரும்பும் தீர்வு, 5. எழுக தமிழ்நாடே! ஆகியவை தான் அந்த 5 தொகுதிகளின் தலைப்புகள் ஆகும். அவை மட்டுமின்றி, ராமதாஸின் டுவிட்டர்ப் பதிவுகள் ‘என் குறள்’ என்ற தலைப்பில் தனிப் புத்தகமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

ராமதாஸ் படைப்பில் உருவான இந்த 6 நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், தியாகராயா சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் வரும் 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். நிறைவாக ராமதாஸ் ஏற்புரை நிகழ்த்துவார். விழாவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே மணி தலைமையேற்கிறார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: