Sunday, July 6, 2014

பாமக பெண்கள் அணியினர் வீடு வீடாக சென்று கையெழுத்து வேட்டை



தென் சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் இன்று நடந்தது. பா.ம.க. துணை பொதுச் செயாலளர் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் மது வேண்டுமா? வேண்டாமா என்று வீடு வீடாக சென்று பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த இயக்கத்தை வருகிற 8–ந்தேதி முதல் சென்னையில் பா.ம.க. மகளிர் அணியினர் தொடங்க உள்ளனர்.
கட்சியின் 25–ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் 250 இடங்களில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யபட்டது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: