Thursday, July 7, 2011

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல்:ராமதாஸ்

வேளாண் துறைக்கு தனியாக, "பட்ஜெட்' தாக்கல் செய்ய வேண்டும் என்பதை, மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில், 4வது வேளாண் நிழல் பட்ஜெட் அறிக்கையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு உள்ளதைப் போல, விவசாயிகளுக்கும் ஊதியக் குழு அமைத்து, அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்தல், பள்ளிகளில் மதிய உணவுடன் வாழைப்பழம், நெல்லிக்காய் கொடுத்தல், பால்,"பூத்'களில் கீரை விற்பனை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக சிறப்பு ஐந்தாண்டு திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தில், விவசாய வேலைகளையும் சேர்த்தல், விவசாய கடன்களுக்காக 1,000 கோடி ரூபாய் சுழல்நிதி உள்ளிட்ட அம்சங்களுடன், 21 ஆயிரத்து 67 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், வேளாண் நிழல் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. "இதை, தமிழக அரசுக்கு விரைவில் அனுப்ப உள்ளோம்' என, ராமதாஸ் தெரிவித்தார்.

பின், ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிப்போருக்கும், அரசுப் பள்ளிகளில் பயில்வோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். சமச்சீர் கல்வியை மனிதாபிமான அடிப்படையில் பா.ம.க., ஆதரிக்கிறது. தேர்தலில் பணம் விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. "பூத் ஏஜென்ட்'களுக்கு கட்சிகள் பணம் தருவது இதற்கு முக்கிய காரணம். இனிவரும் தேர்தல்களில், "பூத் ஏஜென்ட்'களுக்கு பா.ம.க., பணம் தராது. மற்ற கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: