Sunday, June 27, 2010

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி சென்னையில் கூடுகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந் தேதி, சென்னையில் கூடுகிறது.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள், கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, அளவிலான அனைத்து நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: