Thursday, May 13, 2010

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?-கருணாநிதி பேட்டி

சென்னை: உடல் ஓய்வைத் தேடுகிறது, உள்ளம் உழைப்பைத் தொடரச் சொல்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

5வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளைக் கடந்து நேற்று 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அவர் இதையொட்டி அளித்துள்ள சிறப்புப் பேட்டிகளில் கூறியுள்ளதாவது:

மீ்ண்டும் கூட்டணியில் பாமக?:

கேள்வி: ராஜ்யசபா [^] தேர்தலில் திமுக மட்டும் தனியாக 3 இடங்களில் வெற்றி பெற முடியும். இந் நிலையில் உங்களை விட்டுப் பிரிந்து போன பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் உங்களோடு சேரப் போகிறது என்றும், டாக்டர் ராமதாசும், காடுவெட்டி குருவும் உங்களைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும், டாக்டர் அன்புமணிக்கு ஒரு சீட் கேட்கப் போகிறார்கள் என்றும் செய்திகள் [^] வருகின்றன.இந்தச் செய்திகள் எல்லாம் உண்மையா

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கெல்லாம் விடை காணத் தான் 30-5-2010 அன்று கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினைக் கூட்டியிருக்கிறோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயக அடிப்படையிலான கட்சி என்பது உங்களுக்கே தெரியும். என்ன தான் நான் கட்சித் தலைவர் என்ற போதிலும்- இது போன்ற முக்கியமான பிரச்சனைகளில் கட்சியின் முடிவினை அறிந்து கொண்டு தான் முடிவெடுப்பேன் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே!

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: