Showing posts with label மே 24ம் தேதி பாமக செயற்குழு கூட்டம். Show all posts
Showing posts with label மே 24ம் தேதி பாமக செயற்குழு கூட்டம். Show all posts

Wednesday, May 20, 2009

மே 24ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்

தைலாபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் , தனது தோல்விக்கான காரணங்களை ஆராய, வரும் மே 24ம் தேதி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது பாமக

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், மே 24ம் தேதி காலை 11 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்ரடர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். எனது தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

இக் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி , எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர் கள் கலந்து கொள்கின்றனர்.

இக் கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: