காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
வன்னியர் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, வன்னிய சங்கம் ஏற்படுத்தப்பட்டது. சிலரது சூழ்ச்சி தந்திரம் காரணமாக நம்மை கீழே தள்ளியுள்ளனர்.
எல்லாருக்கும் ஜாதி ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. இது இல்லாதவர் எவரும் இல்லை என்று கூறலாம்.
நாட்டில் பொருளாதார ரீதியாக பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை என ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இதில், ஒடுக்கப்பட்டு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தான் வன்னியர்கள். வாழ்விழந்த ஜாதி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஜாதி என்று கூட கூறலாம்.
முன்பு, 1980 ம் ஆண்டு வன்னியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை. பார்க்க தவமாக இருந்தேன். ஏழு நாட்கள் மறியல் போராட்டத்திற்கு பின் தான் சந்திக்க முடிந்தது.
அப்போது, எம்.ஜி.ஆர். உடன் இருந்தவர்கள் அவருக்கு தெரிய வேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்காமலே காலத்தை ஓட்டிவிட்டனர்.
2011 ம் ஆண்டு ஜாதி வாரியாக, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது வன்னியர்கள் அதிகம் வசிப்பது தெரிய வரும். இது தெரியக் கூடாது என்பதற்காகவே ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர்.
வன்னியர்கள் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர்.
வன்னியர்கள் குடித்து அரசுக்கு வருவாயை பெருக்கி தருகின்றனர். வருடத்திற்கு 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றது என்றார்.
Showing posts with label சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ். Show all posts
Showing posts with label சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ். Show all posts
Monday, November 16, 2009
சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ்
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------