Thursday, April 30, 2009

இல‌ங்கை‌‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக தொட‌ர்‌ந்து போராடுவோ‌ம் : பழ.நெடுமாற‌ன்


த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல எ‌ன்று கூ‌றிய இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், அவ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர்.


இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌த்‌தி ம‌க்க‌ள் உ‌ரிமை கூ‌ட்டமை‌ப்பு சா‌ர்‌பி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ஒரு நா‌ள் அடையாள உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.
இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், த‌மி‌ழ் ஆ‌‌ர்வல‌ர்க‌ள் ‌தியாகு, புகழே‌ந்‌தி, ‌த‌ங்கராஜா, ‌தி‌ரு‌ச்‌சி வேலு‌ச்சா‌மி, ‌விடுதலை ராஜே‌ந்‌திர‌ன், வை‌த்‌திய‌லி‌ங்க‌ம், ‌க‌விஞ‌ர் தாமரை உ‌ள்பட ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்து பே‌சின‌ர்.


இ‌ப்போரா‌‌ட்டத்‌தி‌ன் முடி‌வி‌ல் த‌மி‌ழ்நாடுவா‌ழ் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் இல‌‌‌ங்கை‌யி‌ல் ‌நிர‌‌ந்‌தர போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம், பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ம‌க்களு‌க்கு தேவையான உத‌விகளை வழ‌ங்க ச‌ர்வதேச அமை‌ப்புகளை இல‌ங்கை அரசு அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம், பே‌ச்சுவா‌ர்‌த்தை மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் அவரவ‌ர் இட‌‌ங்க‌ளி‌ல் ‌மீ‌ண்டு‌ம் குடியேற ஆவண செ‌ய்ய வே‌ண்டு‌ம் என வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டது.


உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை மு‌டி‌த்து வை‌த்து பழ.நெடுமாற‌ன் பேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள த‌மிழ‌ர்களை இல‌‌ங்கை அரசு முறையாக பராம‌ரி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌னி‌ல் அ‌வ‌ர்களை ஐ.நா. சபை‌யிட‌ம் ஒ‌ப்பட‌ை‌த்து ‌விட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் த‌மிழ‌ர்க‌ள் எ‌ன்ற ஒரே கார‌ண‌த்‌தி‌ற்காக அ‌‌வ‌ர்களை இல‌ங்கை அரசு புற‌க்க‌ணி‌க்‌கிறது.
த‌மி‌ழ் ம‌‌ண்‌ணி‌ல் இரு‌க்கு‌ம் வரை இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் யாரு‌ம் அக‌திக‌ள் அ‌ல்ல. அவ‌ர்க‌‌ள் எ‌ங்க‌ள் சகோதர, சகோத‌‌ரிக‌ள். இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து போரா‌டுவோ‌ம் எ‌ன்றா‌ர் பழ.நெடுமா‌ற‌ன்.
‌பி‌ன்ன‌ர் பழ‌ச்சாறு கொடு‌த்து உ‌‌ண்ணா‌விரத‌த்தை பழ.நெடுமாற‌ன் முடி‌த்து ‌வை‌த்தா‌ர். இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌த்‌த‌ி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்

நன்றி:http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0904/30/1090430099_1.htm

பஸ் கட்டண குறைப்பு தேர்தல் மோசடி-ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு திடீரென டவுன் பஸ் கட்டணத்தை சத்தமின்றி குறைத்துள்ளது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதே சட்டத்தையும், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. அவை நடைமுறையில் இருக்கும்போது அரசின் நடவடிக்கைகள் பற்றியோ, திட்டங்கள், உதவிகளை குறித்தோ நாளேடுகளில் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் திமுக அரசு அதை அப்பட்டமாக மீறி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சொல்லிக்கொண்டே மிதவை பேருந்து, சொகுசு பேருந்து, சிறப்புப் பேருந்து, இடையில் நிற்காத பேருந்து என்ற எல்லாம் பல்வேறு பெயர்களில் பேருந்துகளை இயக்கி சாதாரணக் கட்டணத்தை விட மூன்று, நான்கு மடங்கு கட்டணத்தை வசூலித்தனர்.

இன்று திடீரென அனைத்து வகை பேருந்துகளுக்கும் ஒரே வகையான கட்டணம் என்ற கட்டணக் குறைப்பை சத்தமின்றி செயல்படுத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகின்ற இன்னொரு ஒரு கபட நாடகமாகும். தேர்தலுக்காக கட்டணத்தைக் குறைத்து, தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள்.

திமுக அரசின் இந்த மோசடி வேலையில் மக்கள் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியை தடுத்து நிறுத்த உதவாது.

இப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றின்பின் ஒன்றாக காலில் போட்டு மிதிப்பதை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
இதர மாநிலங்களில் 'உம்' என்றால் குற்றம் என்று நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறி கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதிமுகவும் புகார்..

இந் நிலையில் இன்று தென் சென்னை தொகுதி வேட்பாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் நடந்தது.
மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த இக் கூட்டத்தில் பஸ் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தது.
சொகுசு பஸ்களில் ரூ. 10 என்று இருந்த கட்டணம் ரூ.4.50ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற பஸ்களில் ரூ.3 ஆக இருந்த கட்டணம் ரூ.2ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மனு தந்தது.
இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளி்த்துள்ளனர்.

கலெக்டரை மாற்ற கோரி பாமக உண்ணாவிரதம்:

இந் நிலையில் வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோரை நீக்க வேண்டும் என்று கோரி பாமகவினர் முன்னாள் ரயில்வே இணையமைச்சரும் அரக்கோணம் பாமக வேட்பாளருமான வேலு தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி நடக்கிறது. அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த வாசு நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேலூர் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் அதிமுக வேட்பாளர் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்னதாக பாமகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

-நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

போரை நிறுத்த முடியாது: இலங்கை

விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து, அதன் தலைவர் பிரபாகரனைப் பிடிக்கும் வரை போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.


பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கௌச்னரும், இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபாண்டும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்சவை நேரில் சந்தித்து இலங்கை அரசு உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


முப்பது வருடங்களுக்குப் பின் காலம் நெருங்கிவந்துள்ளதால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பிடிபடும்வரை போரை அரசு நிறுத்தாது என கோத்தபய ராஜபட்ச அவர்களிடம் தெரிவித்தார். போர் நிறுத்தம் அறிவித்தால் அதன்மூலம் விடுதலைப்புலிகள்தான் பலனடைவார்கள் என்றார் அவர்.
பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிக்குச் செல்ல ஐநா உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையையும் கோத்தபய நிராகரித்தார்.


புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சில ஊடகங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற அவர், அரசை நம்புவதா அல்லது பயங்கரவாத அமைப்பை நம்புவதா என்பதை இங்கிலாந்து அரசு முடிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

நன்றி:தினமணி

Wednesday, April 29, 2009

என் கேள்விக்கு என்ன பதில்?

இலங்கைத் தமிழர் பிரச்னையில் 4 வாக்குறுதிகளை வெளியிட முதல்வர் கருணாநிதியும், மத்திய அரசும் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.


நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:


"இலங்கைப் பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதமும், பின்னர் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என இவர்கள் கூறிக்கொண்டதும், ஏற்கெனவே திட்டமிட்டு தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.


இந்த நாடகத்தில் ப. சிதம்பரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது.
இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும், அது உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கு சிதம்பரம் கூறுகிறார். இவையெல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.
இந்தியா நினைத்திருந்தால், 3 மாதங்களுக்கு முன்பே போரை நிறுத்தி, 5 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.


தேர்தலில் தமிழக வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அச்சத்தில் போர்நிறுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் அறிவித்திருக்கிறார். இதற்கு கருணாநிதியும், சிதம்பரமும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?


ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று கருணாநிதியும், காங்கிரஸýம் விரும்பினால் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.


1. தனி ஈழம் அமைவதுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு.
2. தனி ஈழம் அமைய எல்லா வகையிலும் உதவுவோம்.
3. தனிஈழ போராட்டம்- ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.
4. ஈழத் தமிழர் போராட்டத்தில் இதுவரை 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதைப் போர்குற்றமாகக் கருதி இலங்கை அதிபர் ராஜபட்ச, ராணுவத் தளபதி பொன்சேகா, பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்ற 4 அறிவிப்புகளையும் வாக்குறுதிகளாக அளிக்க கருணாநிதியும், சிதம்பரமும், மத்திய அரசும் தயாரா என்றார் ராமதாஸ்.

நன்றி :தினமணி நாளிதழ்

Tuesday, April 28, 2009

மக்கள் தொலைக்காட்சி

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம்களை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

தமிழர்களின் கலை, இலக்கியவற்றை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

தமிழர்களின் வாழ்வை, உண்மை நிலையை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைகாட்சி

கற்பனையும், சினிமாவும், ஆபாசங்களும் நிறைந்த, வீணர்களின் அரட்டையில், ஒருதலைப் பட்சமாக செய்திகளை பரௌப்பும், ஒருவழி காட்சி தொடர்பு தொலைக் காட்சிகளின் மத்தியில், இவைகள் எல்லாம் அல்லாது முழுக்க முழுக்க தமிழர்களுக்காக, தமிழ் இனத்தின் உணர்வை, செயல்பாடுகளை வெளிபடுத்த, பொது மக்களின் எண்ணங்களே, செயல்களே -வெளிபடுத்தும் ஒரு தொலைக் காட்சி.

தமிழர்களின் கிராமங்களை, கிராமாத்து மக்களை, எல்லாதரப்பு மக்களின் எண்ணங்களை, தமிழ் மக்களின் மனங்களை வெளிபடுத்தும் அடையாளம் தான் - மக்கள் தொலைக்காட்சி

உழவர்களின் உண்மை நிலையும், வயல்வெளிகளிலும் இதுவரை எந்த ஒரு தொலைக் காட்சிகளும் ஊடுருவாத, போகாத இடத்திற்க்கும் போகும் ஊடகம் - மக்கள் தொலைக் காட்சி.

உலக ஊடகங்களில், தனக்கென்ற தனி கொள்களையும், மக்களோடு மக்களாக 'பொது' மக்களே பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெருவதும், எல்லா பாமர மக்களும் தொலைக் காட்சிகளில் வர முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டிய ஊடகம்.

ஒட்டு மொத்த உலக தமிழர்களின் ஊடக அடையாளம், தமிழ் மக்களின் இல்லத் திரை - மக்கள் தொலைக் காட்சி.

thanks to: http://makkal.tv/

தேர்தல் - 2009 : பா.ம.க வேட்பாளர்கள்

தேர்தல் - 2009 : பா.ம.க வேட்பாளர்கள்
ஆர்.வேலு - அரக்கோணம்
செந்தில் - தருமபுரி
ஏ.கே.மூர்த்தி - திருபெரும்புதூர்
பேராசிரியர் ராமதாஸ் - புதுச்ச‌ேரி
குரு - திருவண்ணாமலை
சிதம்பரம் - பொன்னுசாமி

தன்ராஜ் -கள்ளக்குறிச்சி

பா.ம.க தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் விபரம்




Monday, April 27, 2009

எது உண்மை எது பொய்?


இலங்கை போர் நிறுத்தம் பற்றி பல்வேறு செய்திகள் வருகின்றன. மத்திய அரசு, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்ததாக சொல்கிறது.

மாலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ராஜபக்சே-வும், இலங்கை ராணுவ அதிகாரியிம் , -இந்திய தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

எது உண்மை, எது பொய்?

சில நியாமான கேள்விகள் மனிதில் எழதான் செய்கிறது.

1. இவ்வளவு நாள் இந்திய அரசு, மற்ற நாட்டு உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்ற சொன்ன இந்திய அரசு, இன்று எப்படி தலையிட்டு( தலையிட்டதா?) இலன்கை உடனே போர் நிறுத்தம் செய்கிறது என்று அறிவித்து இருக்கிறது....?

2.கருணானிதி அவர்களுக்கு இவ்வளவு நாள் உண்ணாவிரதம் இல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் இரந்தப் பிறகு, கடை காட்சியாக உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசை செவி சாய்க்க வைத்தாரே, இதை ஏன் முதலிலே செய்யவில்லை


3.உலக நாடுகள், ஐ.நா., G8 நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புகள், போர் நிறத்தம் செய்ய வலியுறுத்தின போது, இலங்கை ஏன் செவி சாய்க்க வில்லை

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
http://thatstamil.oneindia.in/news/2009/04/27/tn-sri-lanka-issue-and-karundnidhis-fast.html

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது, ஐ.நா. கூறியது, ஐரோப்பிய நாடுகள் கூறின, உலகெங்கும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இத்தனை பேர் கூறியும் கேட்காத இலங்கை அரசு, இன்று முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கூறியதைக் கேட்டு டக்கென்று தாக்குதலை நிறுத்துவதாக கூறியுள்ளது.அதிகாலையில் உண்ணாவிரதம், பிற்பகலில் போர் நிறுத்தம் என்று மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன. இது மக்கள் மனதில் பல ஆச்சரியக் கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இதுவரை சுமார் 13 பேர் தீக்குளித்து தியாகம் செய்துள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதவதையும், உணவு, உடை இன்றி பாதிக்கப்படுவதை ஐநா சபை உறுதிப்படுத்தியதோடு, உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இதே கோரிக்கையை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகிக்கும் திமுக அரசும் தான் காரணம் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கி எழுந்து உலக மக்களை கவனத்தை கவரும் விதத்தில் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இப்படி பல்வேறு தளங்களில், பல்வேறு முறைகளி்ல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஏகப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலிகள், பொது வேலைநிறுத்தங்கள், தீக்குளிப்புகள்.

உலக நாடுகள் அனைத்தும் யார் இந்த தமிழர்கள் என்று கேட்கும் அளவுக்கு போராட்டங்களின் சத்தம் உலகை உலுக்கி விட்டது.ஆனால் அப்போதெல்லாம் திமுக உணர்ச்சிவசப்படவில்லை. காங்கிரஸோ கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் இன்று திடீரென அதிகாலையில் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார் முதல்வர் கருணாநிதி. அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் அலறி அடித்து இலங்கையைத் தொடர்பு கொள்கிறது மத்திய அரசு. அடுத்த சில நிமிடங்களில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுகிறது இலங்கை அரசு.அதாவது கிட்டத்தட்ட 7 மணி நேரங்களில் எல்லாமே முடிந்து விட்டது. அதாவது போரை நிறுத்தியாகி விட்டது.ஆனால் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் அலை மோதுகிறது.இந்தியாவால் போரை நிறுத்த முடியும் என்பது கருணாநிதி உண்ணாவிரதத்தின் மூலம் தெளிவாகி விட்டது.இந்திய அரசை வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்கும் அளவுக்கு திமுகவுக்கு பலம் உள்ளது என்பதை கருணாநிதியின் உண்ணாவிரதம் தெளிவாக்கியுள்ளது.கருணாநிதி நினைத்தால், மத்திய அரசு நினைத்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க முடியும் என்பதை இந்த உண்ணாவிரதம் நிரூபித்துள்ளது.ஆனால் இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை.

இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.அதற்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று, இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகம் முழுவதும் முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறி விட்டது.2வது தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், நிச்சயம் அமைத்துத் தரும் என்ற ஜெயலலிதாவின் திடீர் பல்டி அறிவிப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் அவர் மீதான பார்வையை மாற்றிப் போட்டு விட்டது.

இதை விட முக்கியமாக, இலங்கை விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் மதிமுக பொதுச் செயாளர் வைகோவும், இடதுசாரிகளும் காட்டி வரும் ஆர்வத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக உளவுப் பிரிவு முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளதாம்.இந்த நிலையில் ஜெயலலிதா தனி ஈழத்தை ஆதரித்து விட்டார். அப்படியானால் கருணாநிதி என்ன சொல்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனால் இலங்கை விவகாரத்தில் திமுக தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் பளீர் என பொட்டில் அறைந்தது போல விளக்கும் முகமாகவே, கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கருதப்படுகிறது.இந்த உண்ணாவிரதம் மூலம் அதிமுக கூட்டணியின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தேர்தலில் திமுக- காங். கூட்டணிக்கு ஒரேயடியாக மக்கள் ஆப்பு வைக்காமல் தடுக்கலாம் என்ற எண்ணமும் அடங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.


இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி உண்ணாவிரதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஒரு டிவியின் வர்னணையாளர் இன்னும் சில மணி நேரங்களில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விடும என்று கூறியதுதான்.எது எப்படியோ உண்ணாவிரதம் முடிந்து விட்டது. இலங்கையில் போர் இனி நடக்காது என்று ப.சிதம்பரமும் நம்பிக்கை தெரிவித்து விட்டார். நாளை காலையில் நியூஸ் பேப்பரைப் படிக்கும்போதும், டிவி செய்திகளைப் பார்க்கும்போதும்,, ராணுவத் தாக்குதலில் இத்தனை பேர் பலி என்ற செய்தி வராது என்று நம்புவோம்.

Saturday, April 25, 2009

பசி, பட்டினி, சாவு - செத்துமடியும் ஓர் இனம்

எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி, யாருக்கும், எந்த சக்திக்கும் இந்த கொடுமையை தடுத்த நிறுத்த முடியவில்லை.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றனன்.

சர்வதேச அமைப்புகள் எல்லாம் என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறனவா?

உலக நாடுகளுக்கு, சர்வதேச அமைப்புகளுக்கு, ஊடகங்களுக்கு, தமிழ் இனம் - மனித இனமாக தெரிய வில்லையா? விடுதலை புலிகளின் தீவிரவாதத்தை அழிப்பதின் பேரில், ஏன் இந்த அநியாய கொடுமை, ஏன் இந்த வரலாற்றுக் கொடுமை நடக்கிறது...

பசி, பட்டினி, சாவு

Friday, April 24, 2009

(அ)சாதனைகள் -தலைகுனிவு


கடந்த ஐந்து வருடங்களாக காங்கரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கீழ்க் கண்டவற்றை முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைய செய்யவில்லை. கண்ணில் தெரிவது எல்லாம் இவர்களின் சாதனை அணுச்சக்தி ஒப்பந்தம் மட்டுமே. இதுவும் சாதனை என்று சொல்ல முடியாது. இந்தியாவை மற்ற நாட்டினரிடம் சார்ந்து இருக்கவே வழி வகை செய்கிறது.
இதுவெல்லாம் இந்த அரசின் (அ)சாதனைகள்.

1. ஏழ்மை -வறுமை நிலை - 80 விழுக்காடு.

2. மோசமான / போடபடாத சாக்கடைகள்,

3. மோசமான / போடபடாத கட்டமைப்பு வசதிகள்,

4.வேலையில்லாதவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

5.விலைவாசி உயர்வு

6.மோசமான நிர்வாகம், மோசமான அரசு அதிகாரிகள். 1950 முதல் இன்று
வரை அவர்களின் நிலையும் மாறவில்லை. செயல்பாடுகளும் மாறவில்லை,

7.மக்களின் , நாட்டின் பாதுகாப்பின்மை

8.தீவிரவாதம் அதிகரிப்பு

9.சமுதாய சீர்கேடுகள் அதிகரிப்பு

10.முன்னேற்றம் காணாத கிராமங்கள்

11. லஞ்சம் அதிகரிப்பு

12.கல்வி கட்டணம் கட்டுபடுத்தாத கல்வி இயக்கம்

13.மின்சாரம் தேவையான அளவு உற்பத்தி செய்யாமை,.

14.மோசாமாகி கொண்டு வரும் இந்திய அரசியல்

15.நீதிக்கும், காவலுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு.


இன்னும் எவ்வளவோ....ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையேயா பிரச்சனைகள் கணக்கில் அடங்கா,,,இது அந்த அந்த பகுதி மக்களுக்கும், மாநிலத்துக்கும் மட்டும் தான் வெளிச்சம்.....


Wednesday, April 22, 2009

உச்சகட்ட கடைசி காட்சி

இன்றைய பொது வேலை நிறுத்தம் , தி.மு.க-வின் கடைசி காட்சி. நேற்றைய மத்திய அரசின் அவசர கூட்டத்தில் கூட தமிழர்களை கொல்லபடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று தான் இந்தியா சொல்லி இருக்கிறதே தவிர, இலங்கை அரசௌ உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி உடனடியாக போரை நிறுத்தவிட்டால், இலங்கைக்கு அளித்துவரும் எல்லா உதவிகளையும், மற்றும் தூதரக உறவையும் முறித்து கொள்வோம் என்று கூற வில்லை. இது வருந்தி கவலை பட்டு இருக்கும் இந்திய மற்றும் உலக தமிழ் மக்களுக்கு மேலும் பெருத்த ஏமற்றத்தையும், கோபத்தையும் இன்னமும் அதிகரிக்க செய்து இருக்கிறது.


சில நியாமான கேள்விகளையும், உணர்வுகளையும் இங்கே வெளிபடுத்தியே ஆகவேண்டும்.

1. எத்தனை தடவை மத்திய அரசு அவசர கூட்டதை கூட்டும். மக்களை ஏமாற்றுவற்கும், சிலரை திருப்தி படுத்டுவும் எதற்க்கு இந்த முயற்சி.

2.இந்திய அரசாங்கம் போரை நிறுத்த வேண்டாம். குறைந்தது இலங்கைக்கு அளித்து வரும் எல்லா உதவிகலையும் யேன் நிறுத்த கூடாது.?

3.தமிழ் இனம் இந்திய மக்களுக்கு சொந்தம் இல்லையா. சொந்தமோ பந்தமோ, அருகில் உள்ள ஒரு நாடு, தமிழ் மக்களை கொன்று கொவித்து வருகிறது. குறைந்தது மனிதாபமான அடிபடையில், மனித இனத்தின் அழிவுகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தியாவின் பலம் இவ்வளவு தானா?

4.இதை பார்க்கும் போது, இந்திய அரசின், சிலரின் உதவியும், ஆதரவும் இல்லாமல் இலன்கையில், இப்படி தொடர்ந்து போரை நடத்தி கொண்டு இருக்க முடியாது, என்றே தோன்றுகிறது.

5.இந்திய அரசு, ஒரு உயிரை விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் என்று முடிவு தெரிந்ததற்க்காக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரின் பழி வாங்குவது எவ்வித்ததில் நியாயம்.?


6. விடுதலை புலிகலை அழிப்பதின் பேரில், ஒரு நாட்டின் வாழும் குடிமக்களை கண்மூடித்தனமாக அழிப்பது எவ்விதத்தில் நியாயம்?


7.இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் - மதில் மேல் பூனையாக இருப்பதையே காட்டுகிறது. இது இவர்களின் இயலாமையா இல்லை பாசாங்கா?


8.சில நாட்களுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சில அரசியல் கட்சிகளும், சில இயக்கங்களும், பொது வேலை நிறுத்தம் என்று சொன்ன போது, இதே தமிழக அரசும், காவல் துறையும் , பொதுவேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் , இதை சில தொலைக் காட்சிகல் இரவு முழுவதும், ஒளிபரப்பிக் கொண்டு இருந்தன...அப்படி கர்சித்தவர்கள் இன்று எங்கே போனார்கள். இது நியாயமா? ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்பதையே காட்டுகிறதா?

9.இதில் வேடிக்கை என்ன வென்றால், ஒரு நாட்டின் ஒரு பகுதியில் ஒரு இனத்தை அழித்துக் கொண்டு இருக்கும் வேலையில், உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் , எந்த இயக்கதிற்க்கும், எந்த ஒரு தனி மனிதனுக்கும், அதிகாரமும் இல்லை, பலமும் இல்லை, அக்கரையும் இல்லை என்பதே காட்டுகிறது. இதுவெல்லாம் வரலாற்றில் மட்டும் பதிவாக அமையும். இது இன்றைய காலக்கட்டத்தில், உலக நாடுகள் பெரும் தவறுகளை தடுக்க தவறி விட்டன. இவைகள் எல்லாம் அறிந்த உலக மக்களின்,மனிதத்தின் மனசாட்சி மட்டுமே கருகிக் கொண்டு இருக்கின்றன.


10.இந்தியாவில், சில கட்சிகளும், சில தொலைக் காட்சிகளும், சில பத்திரிக்கைகளும், இந்த மனித அழிவை பற்றி ஒரு பொருட்டாகவே கருத வில்லை என்பதை பார்க்கும்போது ஈவு இரக்கம் இல்லாத ஜெம்மங்களாகவே தோன்றுகிறது.


11.உலக வரலாற்றில், இது மிகபெரிய அழிவு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.







Sunday, April 19, 2009

அசிங்கம் / வெட்க கேடு

தற்போது தி.மு.க கூட்டனி கட்சிகளும், தி.மு.க.வும் ஒரு விசயத்தை பெரியாதக்க முயல்கிறது. அது அண்ணா. தி.மு.க.வில் குறிப்பிட்டு உள்ள சேது சமுத்திர திட்டத்தை பற்றி.


தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக்கு வேற பிரச்சனைகளே கண்ணுக்கு தெரியவில்லைய. -இதை எழுப்புவதன் மூலம், அவர்கள் மற்ற விசயங்களை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அவர்களுக்கு,

1. தினம் தினம் செத்து மடியும் நம் தமிழ் இனத்தின் சாவை , அழிவை வேடிக்க பார்ப்பது - இலங்கை பிரச்சைனைகள் தெரியவில்லையா கண்ணக்கு?


2. காவல் துறைக்கும், வக்கீகளுக்கும் இடையே நடந்த பிரச்சைனைகள் தெரியவில்லையா ?


3. விலைவாசி உயர்வால், அரிசியும், சமையல் பொருள்களின் விலையும் விண்ணை தாண்டும் அளவுக்கு ஏறினது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?


4.விவசாயகளின் வாழ்க்கை தரம் உயர்த்தபடாமல் , இன்னும் ஏழ்மை நிலைய அடைவது பிரச்சைனைகளா தெரியவில்லையா ?


5.சரியான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி இல்லாமல், தமிழ் நாடு இருட்டிலும், சிறு தொழிலார்கள் வேலை இழந்தும், பெறும் கடனாளி ஆனது, பிரச்சைனைகளா தெரியவில்லையா ?


6.அடிப்படை வசதிகாளான, நல்ல குடிநீரும், நல்ல சாக்கடை வசதிகளும் செய்யாமல், சென்னையும், தமிழ்நாடும்- இன்னமும் நாறிக் கொண்டு இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?


7.தேவையான அடிப்படை கட்டமைப்புகளை (சாலை மற்றும், பாலங்களும்) இன்னமும் சரி செயாமல், போடாமல், இருப்பது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?


8.கொலை, கொள்ளை , வழிபறிகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது இவர்களுக்கு பிரச்சைனைகளா தெரியவில்லையா ?

9 ரொம்ப நாளாகவே தமிழ் மீனவர்களை சுட்டுத் தள்ளும் இலங்கை ராணுவத்தின் அட்டூழிலியம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?

10 காவிரி மற்றும் பாலாறு போன்று தமில் நாட்டை சுற்றியும் தண்ணீர் பிரச்சனைகல் எல்லாம் இவர்களுக்கு பிரச்சனைகளாகா தெரியவில்லையா?....
இன்னும் எவ்வளவோ....இவர்களுக்கு யார் தீர்ப்பளிப்பார்கள்?

Saturday, April 18, 2009

கண்டனத்துக்குறியது

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி நேற்றைய பேட்டியின் போது, ஒரு கேள்வி பதிலுக்கு மருத்துவர் ராமதாசை பற்றி பேசியிருந்தார். தன் (மருத்துவர் ராமதாசு-வின்) மகன் ஐந்து வருடங்கள் காங்கரசு ஆட்சியில் இருக்கும் போது, இலங்கை தமிழர்களை பற்றி எந்த கேள்வியும் கேக்க வில்லை என்றும், அதே சமயம் , அவர் தன் மகனை பதவியும் விலக சொல்ல வில்லை. அப்படி மருத்துவர் ராம்தாசு செய்ய சொல்லி இருந்தால் அவரை, நான்(கருணாநிதி)'யோக்கியர்' என்று நினைத்து இருப்பேன் என்று கூறி இருந்தார்.
இது ரொம்பவும் கண்டனத்துக்குறியதும், அவரின் இன்னமும் அரசியல் முதிர்ச்சி இன்மையும் காட்டுகிறது. சில உண்மைகளையும், சில நிகழ்வுகளையும் இங்கே நினைத்து பார்க்க வேண்டும்.
1. இவர் (கருணாநிதி) ஐந்து வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தார். ? இவர் மத்திய அரசியலில் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இவர் தன் உடல் நலத்தையும், குடும்ப நலத்தைப் பற்றியுமே நினைத்து கொண்டு இருந்தாரா?
2.கடந்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலமாக தான் இலங்கையில் போர் தீவிரமடைந்து வருகிறது. கருணாநிதி என்ன தூங்கி கொண்டு இருந்தார?
3.காங்கிரசு அரசில் இருந்து கருணாநிதியின் அமைச்சர்கள் ஏன் பதவி விலக வில்லை. அவர்களை பதவி விலக சொல்லியிருந்தால், கருணாநிதியை 'யோக்கியர்' என்று மக்களும், மற்ற கட்சிகளும் நினைத்து இருக்கும். அப்படி சைய வில்லை.
4. கருணாநிதி ஏன் மத்திய அரசில் இருந்து விலக வில்லை. மதிய அரசு தான் மவுனமாகவும், இலங்கை போரை நிறுத்த, அதர்க்கு சரியான முடிவுகள் எடுக்க வில்லை. கூடணி ஒரு சந்தர்ப்ப வாதம் என்றால், சந்தர்ப்பங்களையே கூட்டணியாக தொடர்ந்து கொண்டு இருப்பவர் கருணாநிதி இல்லையா? இது மட்டுமா, சன் டிவி குழுமத்தில் இருந்து பிரிவது போல் பிரிந்து, தன் குடும்ப லாபத்துக்கும் தன் கட்சிக்கமாக மூன்று தொலைக்காட்சிகளை அரம்பித்து, தயாநிதி மாறனை பதியில் இருந்து இருக்குவது போல் இறக்கி, கனிமொழியை அமைச்சராக்கி, தென் மாவட்ட்டஙலில் அழகிரியை தென்னக முதல்வரா பிரதிபளித்து இருக்கிறார் என்றால் அது மிகை யாகாது. தமிழ் நாட்டில் இனி வரும் காலங்களில் இவரோட குடும்பம் ராஜ பரம்பரை போன்று வாழ , இருக்க கருனாநிதி வழி வகை செய்து இருக்கிறார் என்றால் மறுக்க முடியமா.

5.பாட்டளி மக்கள் கட்சி மட்டும் தான் தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதாக, ஊடகங்களும் , மற்ற கட்சிகளும் பேசுகிறார்கள். எந்த கட்சி மாறவில்லை. எந்த கட்சி மாறாமல் இதுவரை இருக்கிறது.? பாட்டளி மக்கள் கட்சி மட்டும் என்றால் இளக்காரமா?
6.தேர்தலில் எந்த கட்சி எந்த அணியில் வேண்டுமானாலும், சேரட்டும். தேர்தல் கூட்டணி வேறு. அதன் நோக்கம் வேறு. ஆனால், சமுதாய பிரச்சனைகளும், இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளும் இதுவரையிலும் தீர்க்க படவில்லை. அது அதிகார்த்தில் இருக்கும் கட்சியானாலும் சரி, அல்லது, அதிகாரத்தில் இல்லத கட்சியானலும் சரி.
7.மொத்ததில்,யாரை யாரு வேண்டுமனாலும் குறை / குற்றம் சொல்லலாம். ஆனால் வீண் பழியும் , செய்யாததை செய்ததாக தம்பட்டம் அடித்து கொள்வதும் தவிர்க்க படவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு செய்தி ஊடகமாக ஆகி விட்ட காலத்தில், யாரையும், யாரும் ஏமாத்த முடியாது. மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். பொருமிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம், பணமும், அதிகாரமும் இல்லை. ஆனால் வோட்டு இருக்கிறது. வைப்பார்கள் வேட்டு!. தேர்தலுக்கு பின் தெரியும்.
ஆனால் பயம் என்னவோ பணமும், அதிகாரமும் நியாயமான தேர்தலை சீர்க் கொலைத்து விடுமோ என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது. மதிய அரசே சில முக்கியமான விசய்ஙகளில் மவுனமாக இருக்கும் போது, தேர்தல் ஆணையும் மட்டும் என்ன விதி விலக்கா?.
அவர் அவர்களின் மனசாட்சி மட்டுமே நீதி வழங்கும்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: